Main Menu

தமிழகத்தில் ஒரேநாளில் 2ஆயிரம் பேருக்கு தொற்று: மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்தது!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேர்வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்டமாக 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், தனியார் வைத்தியசாலைகளில் 8 பேர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 367 பேர் மரணித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று 1342 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 47 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், இன்று 18 ஆயிரத்து 231 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதுவரை 6 இலட்சத்து 73 ஆயிரத்து 906 பேருக்கு எடுக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...