Main Menu

தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப் பட்ட பத்து நிமிடங்களில் பெண் உயிரிழப்பு!

கொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பேச்சாளர் விஜித ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பொலிஸ் ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளில் யக்கலவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...