Main Menu

கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

மினுவாங்கொடவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை அடுத்து குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இன்று மேலும் 06 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் மற்றும் வெலிசறை பிரன்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,028 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை 06 மணிவரையான காலப்பகுதியில் மேலும் 196 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1,161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் .

பகிரவும்...