Main Menu

டெல்டா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி – ஆய்வில் வெளிவந்த தகவல்!

சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை குறித்த ஆய்வின் முடிவுகளை வௌியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து விஷேட பாதுகாப்பு வழங்குகின்றமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...