Main Menu

டெங்கு காய்ச்சலுக்கு பரிதாமாகப் பலியான முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.தற்போது பளைப் பிரதேச செயலக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும், வலி.மேற்குப் பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான யாழ் மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

டெங்கு காய்ச்சலுக்கு பரிதாமாகப் பலியான அரசாங்க உத்தியோகஸ்தர் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(22) கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, நேற்று முன்தினமிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...