Main Menu

ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் – அரசாங்கம்!

ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம்.

இதுகுறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை.

இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளமை காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஜெனீவாவில் பேசப்படாது என எதிர்பார்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...