Main Menu

ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிராக வழக்குப்பதிவு

Corrézien மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளர்.
அண்மையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வசிக்கும் பணி ஓய்வுபெற்ற ஒருவர், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிரான இந்த வழக்கில், ‘பாரபட்சமாக நடந்துகொண்டதாகவும் அவமதித்ததாகவும்’ குற்றம் சாட்டப்பட்டே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘தடுப்பூசி போடாதவர்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து தடுப்பூசி போடவைப்பேன்!” என மக்ரோன் தெரிவித்திருந்தார். “இது நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாகும். தடுப்பூசி போடாதவர்களை தரம் தாழ்த்தி நடத்துகின்றார். இந்நாட்டின் குடிமக்களை ஜனாதிபதி அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என வழக்கு பதிவு செய்தவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...