Main Menu

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற கூட்டம் இடம்பெறவுள்ளது.
பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டம், ஒரு மணிநேரத்திற்கு இடம்பெறவுள்ளது.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.

இதேவேளை, அவசரகால சட்டத்தை வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் விசேட விவாதம் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

பகிரவும்...