சென்னையில் உள்ள இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமை
சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது.
சுதாகரன், இளவரசிசொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாளை இருவரும் சென்னை திரும்ப இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக் கூடும்- ஆய்வில் தகவல் முந்தைய செய்திகள்