சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தற்போதைய உடல் நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுரேஷ் சலேவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவையா என்பது குறித்த தகவல்களையும் நீதிமன்றம் இதன்போது கோரியுள்ளது.
