Main Menu

சிங்களவர்களுக்கு ஒரு நியாயமும் தமிழர்களுக்கு ஒரு நியாயமுமே நாட்டில் காணப்படுகிறது- சாணக்கியன்!

இலங்கையில், சிங்களவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போரட்டம் செய்தால் ஒரு சட்டமும் தமிழர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தால் ஒருசட்டமும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் தெரிவித்தார்.

மகசின் சிறைச் சாலையில் உண்ணாவிரதமிருக்கு கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதபோராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற உறவுகளுக்கு ஆதரவாக நாங்களும் மட்டக்களப்பிலே அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

2018 இக்கு பிற்பாடு கைது செய்யப்பட்ட உறவுகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்படவேண்டும். அதேநேரத்தில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் ஊடாக தொடர்ச்சியாக ஆளும் தரப்பினர் கைதுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே அந்த கைதுகளை செய்வதற்கான இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் இனி இருக்க கூடாது.

இந்த அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கடந்த காலத்தில் 3 ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர்.

ஆனால் இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இன்னமும் இழுத்தடிப்புக்களே மேற்கொள்ளப்படுகின்றன.

ஜ.நா கூட்டத் தொடரிலே கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

உண்மையில், இந்த பொருளாதார குற்றங்களுக்கு அலி சப்ரியும் பொறுப்பானவர்.

கடந்த ஆட்சி காலத்தில் நீதி அமைச்சராக இருந்த இவர் தான் 20 ஆவது திருத்த சட்டத்தைக் கொண்டுவந்தார்.

இன்று பொருளாதார நெருக்கடியினால் மக்கள் நாட்டிலே வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு ராஜபக்ஸ குடும்பமே காரணமாகும்.

பேர்குற்றங்களை மூடிமறைத்தது போன்று இந்த பொருளாதார குற்றங்களை மூடி மறைக்க முடியாது.

இதற்கு பொறுப்பு கூறவேண்டிய இவர்கள் தப்பி ஓடமுடியாது. இதனை அமைச்சர் அலி சப்ரியும் உணரவேண்டும்.- என்றார்.

பகிரவும்...