Main Menu

சாந்தனின் மரணம் தார்மீக சீற்றத்தை ஏற்படுத்துகின்றது- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சாந்தனின் மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்தெரிவித்துள்ளது. 

சாந்தனின் மரணம் குறித்து சமூகஊடகத்தில் தனது வேதனையை வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

33 வருடங்கள் தவறான சிறைவாசத்திற்குப் பிறகு சாந்தன் காலமானார். அவரது மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற்ம் அவரை விடுவிக்க உத்தரவிட்டபோதிலும் அவர் “சிறப்பு முகாமில்” தடுத்து வைக்கப்பட்டார் – “சிறப்பு முகாமில்” தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்லஇ கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனையாகும்

சாந்தனுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அவரை மீண்டும் பார்க்கவும் அணைக்கவும் 33ஆண்டுகள் காத்திருந்த அவரதுதாயாருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றது.  அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது. மீதமுள்ள அனைத்து “சிறப்பு முகாம்” கைதிகளும் மேலும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டவர்களை “சிறப்பு முகாம்” இல் தடுத்து வைப்பது சட்டவிரோதமான கொடிய தண்டணையாகும். “சிறப்பு முகாம்”  கள் உடனடியாக மூடப்படவேண்டும்.

33 வருடங்களாக சிறையில் இருக்கும் “சிறப்பு முகாம்” கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்

பகிரவும்...