Main Menu

சஹ்ரானின் மாமா உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமினுடைய மாமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய- கெகுனகொல்வ பகுதியில் வைத்து, குறித்த மூவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் சஹரான் மற்றும் அவருடைய ஆதரவாளர்களினால் நடத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்துகொண்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...