Main Menu

சவுதியில் வெள்ளப் பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!

மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.

குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதன்போது ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

1,176 மக்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 40 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளுார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...