Main Menu

சர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு விவகாரம் : எனது பெயருக்கு களங்கம் – ஓபிஎஸ் மகன்

தேனியில்  குச்சனூர் கோயில்  கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று  இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குச்சனூர் கோயில் கல்வெட்டில் இருந்து  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமாரின் பெயர் மறைக்கப்பட்டது.

தற்போது இது தொடர்பாக அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் நேற்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது.

எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்...