Main Menu

சமூக வலைத் தளங்களில் சர்சையை ஏற்படுத்திய வாசகம் ; விளக்கமளித்து அமைச்சுக்கு கடிதம்!

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றின் அறிவிப்பு பலகையில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/ எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அமைச்சரின் பணிப்புரையின் பேரில் அரசகரும மொழிகள் அமைச்சு, இந்நிறுவனத்திடம் இச்சம்பவம் தொடர்பில் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தது

இக்கடிதத்துக்கு பதிலாக குறிப்பிட்ட நிறுவனத்தினர் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான விளக்க கடிதங்களில், இந்த அறிவிப்பு பலகையில் காணப்பட்ட வாசகங்கள் தொடர்பில் மன்னிப்பு கோரி, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். 

பகிரவும்...