Main Menu

“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் ”

சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை நடைப்பயணம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் மாதாகல் சங்கமித்த விரையில் இருந்து தனது தாயின் ஆசீர்வாதத்தோடு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஒரு சமாதான செய்தியைச் சிங்கள மக்களுக்கும் , நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார்.

நடைப்பயணத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்து நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

பகிரவும்...