Main Menu

சட்டம்- ஒழுங்கு பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியில்லை: செல்லூர் ராஜூ

சட்டம்- ஒழுங்கு பற்றி பேச தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாதென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வேலூர்- ஆம்பூரில் ஊடகவியலாளர்களை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செல்லூர் ராஜூ மேலும் கூறியுள்ளதாவது, “மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவிலேயே தமிழகம் மாத்திரம்தான் அமைதி பூங்காவாக காணப்படுகின்றது.

கம்யூனிஸ்டு லீலாவதியை கொலை செய்தது யார்?, ஸ்டாலின் மதுரை சென்றபோது அவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவமும் நடந்தது.

இவற்றையெல்லாம் மு.க.ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். தி.மு.க.ஆட்சியில்தான் சட்டம்- ஒழுங்கு கேலிகூத்தாக இருந்தது.

ஆகையால் சட்டம்- ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அவருக்கு தகுதி கிடையாது” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பகிரவும்...