Main Menu

சஜித் வெற்றி பெறாவிட்டால் நாடு இருண்ட யுகத்திற்கு செல்லும் – ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும், இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என்றும் கூறி நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதேவேளை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய அனைத்து மதங்களையும் பாதுகாத்து, முன்நோக்கிப் பயணிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை வழங்கத்தக்க வேட்பாளர் சஜித் பிரேமதாசவே ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை நோக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் ஒன்றிணையும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பகிரவும்...