Main Menu

கொள்கை ரீதியில் முரண்பாடு இருப்பினும் சஜித்துக்கு மதிப்பளிக்கிறேன் – கோத்தாபய

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனக்குமிடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கோத்தாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படத்தை அவருடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதுடன், அதன் கீழ் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். 

‘இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்தேன். போட்டியாளர்கள் தத்தமது கொள்கைகளில் ஒருவருக்கொருவர் முரண்பட்டாலும் கூட, ஒருவர் மீதொருவர் மரியாதை கொண்டிருப்பர் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

பகிரவும்...