Main Menu

கொரோனா : பிரான்சில் 32 பாடசாலைகள் மூடப்பட்டது

பிரான்சில் தற்போது 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  அரச பேச்சாளர் Gabriel Attal இன்று வியாழக்கிழமை காலை இதனை அறிவித்துள்ளார். பிரான்சில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 524 வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது மொத்த பாடசாலைகளில் 0.5% வீதம் எனவும் குறிப்பிட்டார்.  கொரோனா தொற்றுக்கள் புதிதாக கண்டறியப்பட்டு வருவதை அடுத்தே பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றனர். நேற்று வரை 28 பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 

பகிரவும்...