கொரோனா வைரஸ் – சென்னை உள்ளிட்ட 6 நகரங்களுக்கு மத்திய குழு நியமனம்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 6 நகரங்களுக்கு மத்திய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, ஆமதாபாத், கொல்கத்தா மற்றும் பெங்ளூர் ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளன.
இதையடுத்து இந்த ஆறு நகரங்களிலும் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு உதவ மத்திய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாநில சுகாதாரத்துறையின் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதை மேலும் பலப்படுத்த சில பரிந்துரைகளை வழங்க உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.