Main Menu

கொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 838 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்பிரகாரம் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,528 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,248 இலிருந்து நேற்று (சனிக்கிழமை) 78,797 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...