Main Menu

கொரோனா நோயாளர்களிடம் பக்குவம் காட்ட வேண்டிய நேரம் இது – ஸ்ருதி ஹாசன்

கொரோனா நோயாளர்களிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் படப் பிடிப்புக்குச் செல்வேன். ஆனால், பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே செல்வேன். கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டும் போக்கு பற்றி படிக்கிறேன். இது வருத்தம் அளிக்கிறது.

சிலர் பயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரம் காணப்படுகிறது. இதையெல்லாம் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கொரோனா நோயாளர்களிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...