Main Menu

கொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெல்லி, மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

நாட்டில் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத சூழலில், தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 23ஆம் திகதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி, சில மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்போது நாட்டில் உள்ள 10 மாநிலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்தினால், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வெல்லும் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...