Main Menu

கொரோனா தொற்றுக்கு உள்ளான 119பேர் தலைமறைவு: தீவிர தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படை

கம்பஹா- மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சுனில் ஜயலத் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றோம்.

மேலும், கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று  வரை 5ஆயிரத்து 357 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கொரோனாத் தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் எம்மிடம் உள்ளன.

இதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...