Main Menu

கொரோனா அச்சம்: ஆபத்தான வலயமாக அடையாளப் படுத்தப்பட்டது பொரளை

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஆபத்தான வலயமாக பொரளைப் பகுதி காணப்படுவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொதுமக்களுக்கிடையில் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாகக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் எழுமாற்று அடிப்படையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பி.சி.ஆர்.பரிசோதனைகளின்போது நூற்றுக்கு 90 வீதமானவர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பிரதேசத்தைக் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை வீடுகளில் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...