Main Menu

கேப்பாப்புலவுக்கு விஜயம் செய்தது ஐ.நா. குழு: மக்களுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

அங்கு, காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பாக குறித்த குழுவினால் கேட்டறியப்பட்டன.

கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மக்கள், “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் நியாயப்பாடு, போராடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எம்மிடம் கேட்டறிந்தனர்.

மேலும் எமது பிரச்சினைக்கு அவர்களால் உடனடியாக தீர்வு சொல்ல முடியாத நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைப்புகளுடனும் கலந்துரையாடி எமக்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தாம் உறுதுணையாக இருப்போம்” எனக் கூறியதாக மக்கள் தெரிவித்தனர்.

பகிரவும்...