Main Menu

கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்கு உள்ளானதில் 17பேர் உயிரிழப்பு!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளதில் 17பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) வழக்கமான பயிற்சிக்காக 23 இராணுவ வீரர்களுடன் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

கஜியாடோ கவுண்டியில் உள்ள ஓலே-டெப்சியில் விபத்து நடந்த இடத்தில் இருந்து பலத்த காயங்களுடன் 6 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான இந்த ஹெலிகொப்டர் மில் மி-17 ரகத்தை சேர்ந்தது என தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி குறித்து உடனடியாக எவ்வித தகவலும் வெளிவராதநிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பகிரவும்...