Main Menu

கூட்டமைப்பினை சந்திக்கின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் வாரமளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பெறுவதற்கு தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் ஏனைய தமிழ்க்கட்சிகளுடனும் முற்போக்கு கூட்டணி இது விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்’ அமைப்பதற்கு முன்வரவேண்டும் என்ற அழைப்பை எட்டாவது நாடாளுமன்றத்திலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்திருந்தார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பாகவும் ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...