கூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்ட தைப்பொங்கல்!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்டது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை பொங்கல் பொங்கி தைத்திருநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.