Main Menu

குவைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

குவைட் பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

குறித்த பெண்களில் அதிகமானவர்கள் குவைட்டில் விடுதிகளை கொள்வனவு செய்து அவற்றில் தங்கியிருந்து அந்நாட்டில் வேலை செய்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது அந்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு தரகர்கள் ஒன்றிணைந்து குறித்த பெண்களின் விடுதிகளுக்கு சென்று தங்கள் குவைட் பொலிஸார் என தெரிவித்து குறித்த பெண்களின் பணம், நகைகள் மற்றும் அனைத்து விலைமதிப்பு வாய்ந்த பொருட்களையும் சூரையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் குறித்த பெண்களை தாக்கி வேருறொரு இடத்திற்கு அழைத்து சென்று பொலிஸார் கைது செய்யும் விதமான விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் குவைட் பொலிஸார் இலங்கை தூதுவராலயத்துடன் கலந்துரையாடி அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

பகிரவும்...