Main Menu

கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி, பயங்கரவாத குற்றவாளி

நியுசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் நடத்தி 51 பேரை கொலை செய்தவர் பயங்கரவாத குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.

நியுசிலாந்து காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 51 பேரை அவர் கொலை செய்தார்.

இதுதொடர்பில் ஏற்கனவே அவர் மீது கொலைக்குற்றங்களுடன், 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அவர் மீது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்படடுள்ளது.

பகிரவும்...