Main Menu

காங்கிரஸ் இனி ஒருபோதும் நாட்டை ஆள முடியாது: ராஜேந்திர பாலாஜி

காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஆகையால் அக்கட்சியின் ஆட்சி இனி ஒருபோதும் இடம்பெறாதென  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

விருதுநகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற  நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜி மேலும் கூறியுள்ளதாவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஆன்மீக ஆட்சி என்பதற்கு உதாரணமாக தமிழகத்தில் தேரோட்டம், கோயில் கும்பாபிஷேகம், கோயில் புனரமைப்பு பணிகள் ஆகியன நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டது. அந்த கட்சி, நாட்டுக்கு செய்த தியாகங்களை விட இந்த நாடு அக்கட்சிக்கு நிறைய தியாகங்கள் செய்துவிட்டது.

மேலும் பிரதமர் மோடி நாட்டை நம்புகிறார். ஆகையால்  நாடு மோடியை நம்புகிறது ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...