கல்லூரிகள் திறந்து 4 நாட்களில் 81 மாணவர்களுக்கு கொரோனா
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 17ஆம் திகதி முதல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், 4 நாட்களில் மட்டும் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட கல்லூரிகள், 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 17-ம் திகதி மீண்டும் திறக்கப்பட்டன.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, கல்லூரிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 4 நாட்களில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பரிசோதித்ததில், 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க பேரவைத் தோ்தலில் வெற்றியை உறுதி செய்யுங்கள் – அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் வேண்டுகோள்