Main Menu

கண்டி மாநாட்டில் ஒன்பது தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யது பொது­ப­ல­சேனா

பௌத்த மதத்தை பாது­காத்து அதற்கு முன்­னு­ரிமை வழங்கக் கூடிய அர­சி­ய­ல­மைப்பு அதி­கா­ரங்­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தி தேசிய பாது­காப்புக்கு அச்­சு­றுத்­த­லாக உள்ள இஸ்­லா­மிய தனிச் சட்­டங்­களை உட­ன­டி­யாக நீக்க வேண்டும். அடிப்­ப­டை­வாத கல்­வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலை­யங்­க­ளையும் கால­தாமத­மின்றி அரசு தடை ­செய்ய வேண்டும் என்­பது உட்­பட ஒன்­பது தீர்­மா­னங்­களை பொது­பல சேனா நிறை­வேற்­றி­யுள்­ளது.

பொது­பல சேனாவின் விசேட மாநாடு நேற்று கண்­டியில் நடை­பெற்­றது. இந்த மாநாட்­டி­லேயே இந்த தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.  

அந்த தீர்­மா­னங்­களின் உள்­ள­டக்கம் வரு­மாறு: 

01. சிங்­கள இராச்­சியம் உரு­வாக்க பாரிய மாற்­றங்கள்

1815 ஆம் ஆண்டு சிங்­கள இரா­ச­தா­னி­க­ளுக்கும் ஆங்­கி­லே­ய­ருக்கும் இடையில் செய்துக் கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்தின் பிர­காரம் பறிக்­கப்­பட்ட உரி­மை­களை மீள பெற்றுக் கொள்­வ­தற்கு சிங்­கள இராச்­சியம் உரு­வாக்க பாரிய மாற்­றங்கள் செய்­யப்­பட வேண்டும். 

பௌத்த மதத்­தினை பாது­காத்து   எழுச்சி பெற செய்­வதும் அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும், அத்­துடன் ஏனைய மதங்­களின் உரி­மை­களும், அடிப்­படை மனித உரி­மை­களும் ஒரு­மித்து ஏற்றுக் கொள்­ளப்­பட்டு பாது­காக்­கப்­ப­டுதல் அவ­சியம்.

இலங்­கையின் தேசிய கலாச்­சாரம் மற்றும் மர­பு­ரி­மை­யினை   நிர்­மா­ணித்த சிங்­க­ளவர் பூமி புத்­தி­ரர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

சிங்­கள மொழி­யினை பேசும் அனைத்து மக்­க­ளையும் ஒன்­றுத்­தி­ரட்டி பலம் வாய்ந்த ஒரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­துடன், பின்­பற்­றப்­படும் மதங்­களை  கொண்டு இனங்கள் பிள­வுப்­பட்­டி­ருப்­பது நிறுத்­தப்­பட வேண்டும். அதா­வது சிங்­கள பௌத்தம், சிங்­கள கிறிஸ்­தவம்,  சிங்­கள இஸ்லாம், சிங்­கள இந்து என்று பல்­வேறு மத பிரி­வினர் தற்­போது சமூ­கத்தில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

சிங்­கள நாட்டில் அனைத்து இனங்­களும் ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

02. ஒரு நாடு, ஒரு இனம், ஒரே நீதி

மேலைத்­தேய  அர­சியல் செய­லொ­ழுங்கு மற்றும் மக்­களின் வாழ்க்கை முறைமை குறிப்­பாக ரோம், இலத்தீன், மற்றும் ஆங்­கி­லே­யரின்  உரு­வாக்­க­மா­கவே அர­சி­ய­ல­மைப்பு காணப்­ப­டு­கின்­றது. எமது நாட்­டினை பாது­காக்கும், சுதேச இனங்­க­ளுக்கு தேவை­யான சட்­டங்­களும் காலத்தின் தேவை­க­ளுக்கு ஏற்ப உரு­வாக்­கப்­பட வேண்டும்.

இதற்­க­மைய  நிறை­வேற்று துறை, சட்­டத்­துறை மற்றும் நீதித்­துறை அரச பரி­பா­லனம்,  சட்­ட­செ­ய­லொ­ழுங்­குகள்  ஆகி­யவை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட வேண்டும்.  

ஒவ்­வொரு மத குழுக்கள் அல்­லது ஒரு இனத்தை மையப்­ப­டுத்தி  மத மார்க்­கங்­களை  சட்­ட­மாக்­கி­யுள்­ளமை  உட­ன­டி­யாக இரத்து செய்ய  வேண்டும். அனைத்து இனங்­களும் பொது தேசிய சட்­டத்­திற்கு மதிப்­ப­ளித்து , அதன் பிர­காரம் செயற்­ப­டு­வது கட்­டா­ய­மாக்­கப்­ப­டுதல் பாரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும்.

நாட்டின் பெரும்­பான்மை மக்­களை    பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த  தவ­றி­யுள்ள   தற்­போ­தைய தேர்தல் திருத்த முறை­மைக்கு   பதி­லாக  அனைத்து இனங்­க­ளையும் ஒன்­றுப்­ப­டுத்தும் புதிய  தேர்தல் திருத்த முறைமை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படல் அவ­சியம்.

மதம் மற்றும்  இனங்­களை   அடிப்­ப­டை­யாகக் கொண்டு  செயற்­படும் அனைத்து அர­சியல் கட்­சி­களும் பகி­ரங்­க­மாக  இரத்து செய்­யப்­பட வேண்டும்.

03. பௌத்த மத பாது­காப்பு மற்றும் எழுச்சி பெறல்.

அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பௌத்த மதம் பாது­காக்­கப்­பட்டு   மேலும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  இதனை அர­சாங்கம் தொடர்ந்து  முன்­னெ­டுத்து செல்ல வேண்டும்.இதுவே எமது முதல் கோரிக்­கை­யாகும்.

பௌத்த மத பாது­காப்­பது தொடர்பில் அர­சியல் அமைப்பில் முறை­யான   விளக்­கங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. தற்­போது  இவ்­வி­ட­யங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.  இதற்கு தீர்வு காண எவரும் முன்­வ­ரவும் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­படும் வரையில்  தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக    பௌத்த மதத்­திற்கு  முழு­மை­யான பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும்.

பௌத்த மதத்­திற்கு அர­சி­ய­ல­மைப்­பின்பால் வழங்­கப்­பட்­டுள்ள   உரி­மை­க­ளையும்,  அங்­கி­கா­ரத்­தி­னையும் ஏனைய  மதங்­க­ளுக்கும் வழங்­குதல் அவ­சியம்.  பௌத்த மத  எழுச்­சியில் அர­சாங்கம் நேர­டி­யாக  தொடர்­புப்­ப­டுதல்   வேண்டும்.

மாறுப்­பட்ட அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் செயற்­ப­டு­வ­தற்கு  அர­சாங்கம்  வழி­மு­றை­களை  ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது என்­பது தெளி­வா­கி­யுள்­ளது.  தவ­று­களை திருத்திக் கொள்ள வேண்டும். அடிப்­ப­டை­வாத மதங்கள் தொடர்பில்  மாறுப்­பட்ட  செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது அர­சாங்­கத்தின்  பொறுப்­பாகும்.  இதற்கு   பலம் வாய்ந்த அரச   செய­லொ­ழுங்கு  தேவை.

04. தேசிய பாது­காப்பு

எமது நாடு வர­லாற்று  காலம் தொடக்கம் பல ஆக்­ர­மிப்­புக்­க­ளுக்கு  உட்­பட்டு போராடி  வெற்றிக் கண்­டுள்­ளது. சர்­வ­தேச அர­சி­யலில். இலங்­கையின்  பௌதீக நிலப்­பாங்கு மற்றும் மர­பு­ரி­மை­யான  கலாச்­சா­ரங்கள் அனைத்தும்  பெறு­ம­தி­யா­னவை  இதுவே  பல­ரது  எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மூல காரணம்.

இன­பா­குப்­பாட்டை முன்­னி­லைப்­ப­டுத்தி  30வருட சிவில் யுத்­தத்­திற்குள் பிடிப்­பட்­டி­ருந்த நாடு தற்­போது  மத­வாதம், சமூக வேறு­பாடு, மத அடிப்­ப­டை­வாதம் என்­ப­வற்றைக் கொண்ட   தீவி­ர­வா­தத்­துக்குள் சிக்­கி­யுள்­ளது. இந்­நி­லைமை தொடர்ந்தால் மத போராட்­டமே எதிர்­கா­லத்தில் தோற்றம்பெறும்.

மத­வாதம், இன­வாதம் ஆகி­ய­வற்றை முழு­மை­யாக துடைத்­தெ­றிய வேண்­டு­மாயின் ‘இனங்கள் ஒரு சக்­கரம்’ என்ற கொள்­கையின்  கீழ் ஒன்­றுப்­பட  வேண்டும். இலங்­கையர்  என்ற நிலைப்­பாட்டில் இருந்தால் மாத்­தி­ரமே மத­வாத தீவி­ர­வா­தத்தை  வெற்றிக் கொள்ள முடியும்.

மத அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி தடை­செய்­யப்­பட  வேண்டும்.  பிரத்­தி­யேக   சட்டம்,  வங்கி  முறைமை ,  நீதி­மன்­றத்தின் ஊடாக   அனு­மதி பெற்ற   தனி  நிறு­வன  உரு­வாக்கம்   என்­பவை தேசிய  பாது­காப்­பிற்கு   அச்­சு­றுத்­த­லாக  கரு­தப்­பட்டு  பார­பட்­ச­மின்றி  தடை­செய்ய வேண்டும்.

இன­வாதம், மத  பாகுப்­பாடு,  மத அடிப்­ப­டை­வாதம்,  மற்றும் சர்­வ­தேச   தீவி­ர­வாதம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக  பொது தேசிய கொள்கை திட்ட  கண்­கா­ணிப்­பிற்­காக அனைத்து  தேசிய  சக்­தி­க­ளையும் ஒன்­றுப்­ப­டுத்தி ‘ தேசிய  கண்­கா­ணிப்பு  மத்­திய நிலையம் ‘ ஸ்தாபிக்­கப்­ப­டுதல் காலத்தின் கட்­டா­ய­மாகும்.

05. தேசிய உரிமை பாது­காப்பு

2500ஆம் ஆண்­டுற்கும் அப்­பாற்­பட்ட  வர­லாற்று பின்­ன­ணியை கொண்ட  பௌத்­த­மத நாட்டின்  பௌத்த மத மர­பு­ரி­மைகள்,  விகா­ரைகள் மற்றும்   தொல்­பொ­ருட்கள்  ஆகி­யவை திட்­ட­மிட்டு அழிக்­கப்­பட்­டுள்­ளன.   தொல்­பொருள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பிர­தே­சங்­களும் இன்று   சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஒரு தரப்­பி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

சிங்­கள மொழி­யி­னையும், பௌத்த மத மர­பு­ரி­மை­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள  இடங்­க­ளையும் தேசிய   மர­பு­ரி­மை­யாக்கி பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தல்  தேசிய உரி­மை­யினை பலப்­ப­டுத்தும்.

திட்­ட­மிட்ட வகையில்  பௌத்த மத மர­பு­ரி­மை­களை அழிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். சிங்­கள கலாச்­சா­ரங்கள்  உல­க­ளா­விய  ரீதியில்  பேசும் அள­விற்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­டுதல் அவ­சியம்.

06.நிலை­யான பொரு­ளா­தாரம்

நடப்பு பொரு­ளா­தாரம்   முறை­மை­களில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு  குறு­கிய இடமே வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­மையில்  இருந்து விடுப்­பட  வேண்­டு­மாயின் தேசிய  கொள்­கை­யினை மையப்­ப­டுத்­திய பொரு­ளா­தார  திட்­டங்கள்  வகுக்­கப்­பட வேண்டும்.

தேசிய பொரு­ளா­தா­ரத்­திற்கு வலு சேர்க்கும் வகையில் பாரம்­ப­ரிய உற்­பத்­தி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­க­பட வேண்டும். சுதே­சிய  உற்­பத்­தி­களை  வளர்ச்சி செய்யும் போது பிற தரப்­பி­னரின் உற்­பத்­தி­களை இரண்டாம் தரப்­பி­ன­ராக்­குதல் அவ­சி­ய­மாகும்.

கௌர­வ­மான தொழில்­களை மக்கள் புரிய வழி­மு­றை­களை ஏற்­ப­டுத்­து­வ­துடன். அரபு  நாடு­க­ளுக்கு அடி­ப­ணி­யாத வகையில்  பெண்­களை வீட்டு பணி­க­ளுக்கு    அனுப்­பாத வகையில்  தேசிய   தொழில்கள் உறு­தி­யா­கவும், வினைத்­தி­ற­னா­ன­தா­கவும் காணப்­பட வேண்டும்.

தேசிய பொரு­ளா­தா­ரத்­திற்கு முக்­கி­யத்­துவம் வழங்கும் போது  இனங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்க கூடாது . தற்­போது  இன­ரீ­தியில் வழங்­கப்­பட்­டுள்ள  சிறப்பு சலு­கைகள்   இரத்து செய்­யப்­பட வேண்டும்.

07. தேச­பற்­றினை கொண்ட கல்வி

எமது  கல்வி முறை­மையில்  இனத்­தையும், எதிர்­கால தலை முறை­யி­ன­ரையும் இல்­லா­தொ­ழிக்கும் வழி­மு­றை­களே  மிக சூட்­ச­ம­மான முறையில்  காணப்­ப­டு­கின்­றது. சிங்­கள பௌத்த  இனங்­களின் பாரம்­ப­ரியம் மற்றும் மத கோட்­பா­டுகள் அறிந்துக் கொள்ள முடி­யாத அள­விற்கு  தற்­போ­தைய  கல்வி முறை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. இது சிங்­கள பௌத்த சமூ­கத்­திற்கு பாத­க­மா­னது.

ஆங்­கில கல்வி அவ­சி­ய­மா­னது. கிரா­மிய பாட­சா­லை­களில் இருந்து   ஆங்­கில கல்வி     கற்­பிக்­கப்­பட வேண்டும். தற்­போது ஆங்­கில பிரிவில்  தெரிவு செய்­யப்­பட்ட   பாட­திட்­டங்­களே     காணப்­ப­டு­கின்­றன. மதங்­க­ளுக்கு  முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

பௌத்த சிங்­கள  மாண­வர்கள் எதிர்க் கொள்ளும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு  அவ­சியம். அனைத்து பாட­சா­லை­க­ளிலும்  பிரி­வினா கற்­கைகள் ஆங்­கில பாடத்தை போன்று  கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும்.  தேசத்தின் மீது  பற்­றுக்­க­ளையும், பொது  கலாச்­சா­ரங்கள் தொடர்­பிலும் மாண­வர்­க­ளுக்கு ஆரம்­பத்தில் இருந்து  பாட­சாலை மட்­டத்தில் போதிப்­பதால் அடிப்­ப­டை­வாதம் ஒரு­போதும் தோற்றம் பெறாது.   நாட்டு  மீதான  பற்று  அனைத்து இனங்­க­ளுக்கும் பொது­வா­னது.

அனைத்து பிர­ஜை­களும் உயர் கல்­வி­யினை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மதம் மற்றும் ஒரு  இனத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு  செயற்­படும் பாட­சா­லைகள் தடை செய்­யப்­பட வேண்டும். மத அடிப்­ப­டை­வாதம் மாண­வர்­களின்  பாடத்­திட்­டங்­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­மையும் நீக்­கப்­பட வேண்டும்.

08. வீட­மைப்பு , உட்­கட்­ட­மைப்பு வச­திகள், சனத்­தொகை மதிப்­பீட்டு முகா­மைத்­துவம்

சிங்­கள  தாய்­மார்­களை  இலக்­காகக் கொண்டு   கருத்­தடை செய்­துள்­ளமை   தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது.  இதற்கு  உரிய  சட்ட நடவ டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.ஒரு  இனத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு  திட்­ட­மிட்டு செய்­யப்டும் இந்த கொடு­மைகள்  அழிக்கப்பட வேண்டும்.

வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தற்போது   உள்ள  பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வாக முறையான  தேசிய கொள்கையினை உள்ளடக்கிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.   அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் அரசியல்வாதிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை மீள அரசுடமையாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு  வலுசேர்க்கும்.

09. சுகாதாரம் மற்றும் போசனை.

சுகாதாரம்  இன்றியமையாததாகும்    ஆரோக்கியமான வாழ்க்கை முறைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட கொள்கைத்திட்டங்கள் அரசாங்த்தினால் வகுக்கப்பட வேண்டும்.   தற்போது    மக்கள் எதிர்க் கொள்ளும்  புதிய நோய்களுக்கு   தேசிய   மருத்துவத்தின் ஊடாக தீர்வு காணல் அவசியம்.

ஹலால் உள்ளிட்ட  உணவு வகைகள் தடை செய்யப்ப ட வேண்டும். அவ்வாறான  உணவு  வகைகள்  அவர்களின் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் தனிப்பட்ட விடயமாகும்.  தேசிய  மருத்துவம், சிங்கள  பாரம்பரிய  ஆயுர்வேத  சிகிச்கை முறைமைகள் தொடர்பில் இளைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வது அவசியமாகும். எமது இனம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின்  பாரம்பரியங்கள்   பின்பற்ற வேண்டியது  ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கடமையாகும்.

பகிரவும்...