Main Menu

ஊடகங்களே..! இன­வாதக் கருத்­துக்­களை பரப்புவதை தவிருங்கள்: அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்

இந்­நாட்டில் ஊடக சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­காக குறிப்­பிட்ட சில ஊட­கங்கள் இன­வாதக் கருத்­துக்­களை  பரப்பி மக்­க­ளி­டையே பிள­வு­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. இவர்­க­ளது பொய்ப்­பி­ர­சா­ரங்­களை  குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னர் மற்றும் சட்டத் துறை­யினர் ஆராய்ந்து அவை உண்­மைக்குப் புறம்­பான செய்­திகள் என தெட்டத் தெளிவாக எடுத்­தி­யம்­பிய  போதிலும் கூட அதைக் கூட அவ்­வா­றான ஊட­கங்கள்  மூடி மறைக்­கின்ற செயற்­பா­டு­க­ளையே  தொடர்ந்தும் முன்­னெ­டுத்து  வரு­கி­ன்றன என்று முஸ்லிம் சமய கலா­சார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கல்­ஹின்ன பட்­ட­கொல்­லா­தெ­னிய ஜமா­லியா முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யத்தில்  230 இலட்சம் ரூபா செலவில்  நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள  தொழில்நுட்ப  ஆய்வு கூடத்­துக்­கான  அடிக்கல் நாட்டு விழா அதிபர்  ஏ.ஏ.எம். இக்ராம் தலை­மையில் இடம்­பெற்­றது. அந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர்  இவ்­வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத்  பதி­யுதீன், ஆளு­நர்­க­ளான ஹிஸ்­புல்லாஹ், அசாத் சாலி மற்றும்  வைத்­தியர் சாபி ஆகி­யோர்­க­ளுக்கு முன்­வைக்­கப்­பட்ட அனைத்து குற்­றச்­சாட்­டுக்­களும் உண்­மைக்குப் புறம்­பான விட­ய­மென தெளிவு­ப­டுத்­தப்­பட்ட போதிலும் கூட அந்த மனப்­பாங்கை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோநிலை  அந்த  ஊட­கங்­க­ளுக்கு இல்லை.

முஸ்­லிம்­க­ளா­கிய நாம் இன்று சோதனையும் வேத­னையும் நிறைந்த கால கட்­டத்தில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று  இடம்­பெற்ற பயங்­க­ர­வாத  குண்டுத் தாக்­கு­த­லைத் ­தொ­டர்ந்து முஸ்­லிம்கள் பலவித­மான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளோம்.  பள்ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்கள்,  கலா­சார உடைகள் தொடர்­பாக பெரும்­பான்­மை­யி­னர்கள் பேசி வரு­கின்­றனர்.  பெண்கள் பல பிரச்­சி­னை­களை எதிர்­நோக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் சேவை­யாற்­று­கின்ற பெண்­க­ளு­டைய உடை சம்­பந்­த­மாக கடந்த காலங்­களில் பல பிரச்­சி­னைகள் எழுந்­தன. 

 இதனால் நாம் சொல்­லொண்ணாத்  துன்­பங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின் றோம். இந்­நிலை தொட­ரக்­கூ­டாது. அத்து டன்  ஊட­கங்­களும் இன­வாதக் கருத்­துக்­களை வெளியிடு­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 இதே­வேளை, மாகாண மட்­டத்தில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு மத்­திய அர­சாங்­கத்திலிருந்து நிதி ஒதுக்­கீடு செய்யும் திட்டம் இருக்கவில்லை.  தேசிய பாட­சா­லைக்கு மட்­டுமே மத்­திய அர­சாங்­கத்தின் மூலம்  நிதி  ஒதுக்­கீடு செய்து கொடுக்­கப்­ப­டு­கி­றது. எனினும், மாகாண சபையின் மூலம் மாகாண சபை பாட­சா­லை­க­ளுக்கு நிவர்த்தி செய்து கொள்ள முடி­யாத துர்ப்­பாக்­கி­ய­மான நிலைமை காணப்­பட்­டது. நான் மாகாண சபையில் நீண்ட கால­மாக அமைச்­ச­ராக இருந்த கால­கட்­டத்தின் அனு­ப­வத்தை அறிந்து  இந்த குறை­பாடு தொடர்­பாக நான் பாரா­ளு­மன்­றத்­தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன்.  எனினும் கடந்த காலத்தில் தேசிய பாட­சா­லைக்கு மட்­டுமே நிதி ஒதுக்­கீ­டு­களை செய்து வந்­தன. 

  இந்­நி­லையில், 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி  உரு­வாக்­கப்­பட்ட பிற்­பாடு மத்­திய அர­சாங்­கத்திலிருந்து மாகாணப் பாட­சா­லைக்கு நிதி ஒதுக்­கீடு செய்ய முடி­யாதிருந்த தடை இல்­லாமல் செய்­யப்­பட்டு இன்று மத்­திய அர­சாங்­கத்திலிருந்து மாகாண மட்டப் பாட­சா­லை­க­ளுக்கும் நிதி ஒதுக்­கீ­டுகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் இந்த மாகாண மட்டப் பாட­சா­லைக்கு பாரிய  நிதியை  நாங்கள் பெற்றுக் கொண்­டுள்ளோம். மத்­திய  அர­சாங்­கத்திலிருந்து நீண்ட கால­மாக இருந்து வந்த மாகாணப் பாட­சா­லைக்கு நிதி ஒதுக்­கப்­பட முடி­யாத முட்டுக் கட்டை நிறை­வுக்கு வந்­துள்­ளது.

பொது­வாக ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த எல்லாக் காலத்­திலும் கல்விச் சேவைக்­காக பாரிய நிதி உத­வியை செய்து வரு­கின்­றது. சீ. டபி­ள்யூ. டபிள்யூ. கன்­னங்­கர அறி­மு­கப்­ப­டுத்திய இல­வசக் கல்­வி­முறையை வலு­வூட்­டு­வ­தற்­காக வேண்­டிய பல கல்விச் சேவைகள் ஐக்­கிய தேசியக் கட்சிக் காலத்­தி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இலவசப் பாடப் புத்தகம் விநியோகம், மதிய போஷாக்கு உணவுத் திட்டம்,  இலவசக் காப்புறுதித் திட்டம்,  உயர்தர மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் திட்டம் போன்ற பல வேலைத் திட்டங்களை உருவாக்கி கல்வியில் மறுமல ர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் உப தவிசாளர் ரசான், பிரதேசசபை உறுப்பினர் கலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...