Main Menu

கணவனுக்கு பயந்து குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்த பெண்

தனது கணவரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக  பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஜன்னலுக்கால் பாய்ந்துள்ளார். சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் இடம்பெற்றுள்ளது.  விசாரணைகளின் படி, 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 வயது மகள் மற்றும் கணவனுடன் இருந்த நிலையில், கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கணவர் கூரான கத்தி ஒன்றை எடுத்து மனைவியையும் குழந்தையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த 25 வயதுடைய குறித்த பெண், தனது 2 வயது மகளை கையில் தூக்கிக்கொண்டு வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார். மூன்றாவது தளத்தில் இருந்து வெளியே பாய்ந்தும் குழந்தையும் தாயும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.  இருவருக்கும் தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பகிரவும்...