Main Menu

கட்டாய தடுப்பூசிக்க்கு எதிரான ஆர்ப்பாட்டம்! – 80.000 பேர் பங்கேற்பு

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 80.000 பேர் கலந்துகொண்டனர்.

கட்டாய தடுப்பூசி மற்றும் சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக வாரம்தோறும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாவது வார ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் தலைநகர் பரிஸ் உட்பட ஏராளமான நகரங்களில் இடம்பெற்றிருந்தது.

நாடு முழுவதும் 80.000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் 6.100 பேர் பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இது கடந்த வாரங்களை விட மிக கணிசமான வீழ்ச்சியாகும். கடந்தவார சனிக்கிழமை பரிசில் 19.000 பேர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் 121.000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.  

பகிரவும்...