Main Menu

‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ – நல்லூரில் பேரணி ஆரம்பம்!

‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் ஆரம்பமாகியது.

தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு  சற்று முன்னதாபேரணி ஆரம்பமானது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பேரணியானது கிட்டுப் பூங்காவிற்கு சென்று நிறைவடையவுள்ளதுடன் அங்கு பொதுக்கூட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...