Main Menu

ஒரே நாடு ஒரே மொழி கருத்தை அமித்ஷா திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே மொழி என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சி பீடம் ஏறியுள்ள நிலையில் தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

தபால் துறை, தேர்வுகள் என பல்வேறு வழிகளில் ஹிந்தி திணிப்பு நடவடிக்கையை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்கைக்கு எதிரா தி.மு.க போராட்டங்களை மேற்கொண்டதுடன், தமிழில் தேர்வு எழுத அனுமதியையும் பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...