Main Menu

எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வது பயனற்றது! – மரீன் லு பென்

மக்ரோன் எனக்கு எதிரான பிரச்சாரம் செய்வது பயனற்றது என மரீன் லு பென் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை TF1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மரீன் லு பென் இதனை தெரிவித்தார். ‘மக்ரோன் மிகவும் மிருகத்தனமாக செயற்படுகிறார். சில வேளைகளில் தனது பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக என்னை அவமதிப்பு செய்து வருகிறார். ஆனால் அது பயனற்றது!” என மரீன் லு பென் தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள நிலையில், மக்ரோன் மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவரும் தங்களுக்கான வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர். இதில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி வருகின்றனர்.

அதையடுத்தே மரீன் லு பென் இதனை தெரிவித்துள்ளார். 

பகிரவும்...