Main Menu

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டப்படி எதிர் கொள்வோம் – எடப்பாடி

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கைக்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

39 இடங்களில் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் சோதனை நடத்தியது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்

பகிரவும்...