Day: September 13, 2022
கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி
கனடாவின் டொரண்டோ மேற்கு பகுதியில் உள்ள மிசிசாகாலில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபர் ஒருமேலும் படிக்க...
6,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீட்டெடுத்து உள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு
படையினரின் எதிர்த்தாக்குதல் தொடர்வதால் ரஷ்யாவிடமிருந்து இன்னும் அதிகமான நிலப்பரப்பை மீண்டும் தாம் கைப்பற்றியுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் தெற்கில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து உக்ரேனிய படையினர் 6,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீள கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார். கார்கிவ்மேலும் படிக்க...
மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு செயிண்ட் கீல்ஸ் தேவாலயத்தில் மக்கள் அஞ்சலி
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க் நகரின் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு சிறப்பு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ‘ஓக்’ மரத்திலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் இருந்து புறப்பட்ட ராணிமேலும் படிக்க...
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனா (Catherine Colonna) 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். 15ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், நாளை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும்மேலும் படிக்க...
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டப்படி எதிர் கொள்வோம் – எடப்பாடி
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கைக்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 39 இடங்களில் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் சோதனை நடத்தியது குறித்துமேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதை ஏற்க முடியாது – ஆதிவாசிகளின் தலைவர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார். தம்பன கொடபாகினிய கிராமத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்ற சிலர் முயற்சி – சீனா
இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதானமேலும் படிக்க...
இந்த அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை, ஜனநாயக சீர்திருத்தங்களிற்கு வாய்ப்பில்லை – ஜெனீவாவில் நுவான்
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என காலி முகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான சட்டத்தரணி நுவான் போபகே ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும்மேலும் படிக்க...