Main Menu

எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் – ஸ்டாலின்

தமிழக முதலமைச்சருடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தான் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் ஊடகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தென்னிந்திய சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடன் விவாதிக்கத் தயாரா? என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசின் தயவோடு ஆட்சியை தக்கவைத்த அதிமுகவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவின் எண்ணம் ஈடேறாது என கூறினார்.

விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் என உறுதி கூறிய அவர், உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கான உச்சநீதிமன்ற தடையை விலக்கி கொண்டால், முதலமைச்சருடன் எங்கு வேண்டுமானாலும் தான் விவாதத்திற்கு வர தயார் என அறிவித்தார்.

பகிரவும்...