Main Menu

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தார்.
இதனையடுத்து அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அவர் தான் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பிஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்ததனையடுத்து குறித்த இடத்திற்கு வருகைதந்த காவல்துறையரிடம் ; ஒப்படைத்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர்

இதனையடுத்து ; குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் காவல்துறையினர் ; முற்படுத்தியதை அடுத்து பிணையில். விடுவிக்க உத்தரவிட்ட மன்று எதிர்வரும் 30ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோர் எனும் குற்றச்சாட்டில் மேலும் நான்கு ஊடகவியலாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...