Main Menu

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர்  நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய  செவ்விலேயே குறித்த விடயத்தை   அவர்  தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையின் இறுதி வரைவு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுமாயின் தற்போதுள்ள நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...