Main Menu

உள்ளுராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை!

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.

இதன்போது உள்ளுராட்சி தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய விவிபாட் மூலம் தேர்தல் நடத்த வேண்டும், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் சில கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்டன.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளும், பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பகிரவும்...