Main Menu

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தைக் கடந்தது!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக ஏழு இலட்சத்து நான்காயிரத்து 365பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஒரு கோடியே 87இலட்சத்து இரண்டாயிரத்து 736பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, ஒரு கோடியே 19இலட்சத்து 17ஆயிரத்து 247பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அடுத்தபடியாக பிரேஸில், இந்தியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

பகிரவும்...