Main Menu

உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்

திட மற்றும் அரை திட உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்பிரல் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது இந்த விதி முறையின் நோக்கமாகும்.

இதன்படி இன்றைய தினத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் திட மற்றும் அரை திட உணவு பொருட்களில் கட்டாயம் வர்ணக் குறியீடு காணப்பட வேண்டும்.

தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த விதி முறையை பின்பற்றுதற்காக மூன்று மாத சலுகை காலம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...